Skip to main content

காதல(லாய் ஓர்)ர் தினம்....


முன் நின்று, முதல் பார்த்து
     முறுவலித்து - பின் சென்று
வழிப்பார்த்து, விழியால்
    நகைத் தெல்லாம் ஓர் காலம்....

ஆம்!!!! அன்றெல்லாம்

" யானோக்கும் காலை நிலனோக்கும் நோக்க்காகால்
  தானோக்கி மெல்ல தகும்"

    என்றோம் வள்ளுவன் வழியாய்...

விரல் வலிக்க எழுதியும்,
    கால் வலிக்க காத்திருந்தும்,
கனத்த இதயமும்
   கையில் கடிதமுமாய்
காதல் செய்தோம்....

வலியிருந்தது அனால் வழியில்லை
    இணை சேர..- எத்தனை
எத்தனை தடைகள்
    " சாதி என்றான், பேதமென்றான்
மதம் என்றான், குலமென்றான்
    பணமென்றான்"- பகட்டாய்...

இன்றும் இவை இருக்கிறது
    யார் இல்லை என்றார்....

காதலை கனினியிலும், கைபேசியிலும்
   கதைத்தோ, குறுந்தகவல்
கொடுத்தோ, பெற்றோ மகிழ்கிறோம்...
   இதுவா காதல்..?

" கண்களவு கொள்ளும் சிறுநோக்கும் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது"...- இதுவல்லவே...!!!

பிழை கூறவில்லை நான்!
    மண்ணில் சிலர் உளர்...
யாம் வேண்டுவதெல்லாம் ,
    " பெற்றோர் நிராகரித்தலும்,
      பிள்ளைகள் விரட்டுதலும்" வேண்டாமே?...
     அன்பும், அரவணைப்பும்
பொறுமையும், விட்டுகொடுத்தலுமே காதல்...

காதல் தினமும் தேவை, பின்
     எதற்கோர் தனி காதலர் தினம்,
வாழ்வோம் " காதலாய் ஒவ்வோர் தினமும், கணமும்"...

.

Comments

Popular posts from this blog

பெண் என்பவள்!!!

வெட்கி குனிதல் நாணம்! ஈர்பல் நகைத்தல் வெட்கம்! விசும்பிய குரலும், சுருங்கிய விழியும் நேசம்! கோதிய விரலும் கோதுதல் பதமும் பாசம்! மக்கட்- அதட்டிய பின்பு, தானே அழுதிடும் கண்கள் சோகம்! பஞ்சனை மஞ்சத்தில் மேனி பசுந்தீ பரவலாய் மோகம்! தன்னுயிர் நீந்தீனும் மக்கட், பதி நினை மறவா- ஒரு தீரா தாபம்! தன் உடல் எரித்தும் ஒளி கொடுக்கும்- அவள் என்றும் அணையா உயிர் தீபம்!...

காதல் தோழியே!!!

பெண்ணே- என்னரும் தோழியே       தோளுக்கு தோளாய் இன்பத்தில் தேனாய்      துன்பத்தில் தூணாய் எனக்கு உதவியவளே... நட்பெனும் கப்பலில்      நானும் நீயும் - காதலில்லா கைதுடுப்பை அசைக்கிறோம்...     வாழ்க்கை கடலை கடக்கையில் காதலெனும் புயல் வீச     அன்பென்னும் மின்னல் வெட்ட இணைவெனும் இடி      முழங்கியது நம் மனதில்... காதலைவிட, காலத்தைவிட     நட்பென்பது சிறந்ததல்லவா என் காதல் தோழியே!..     என் ஆசையை நன் மறைக்க உன் ஆசையை நீ மறைக்க     வாழ்க்கை கடலில் ஒரே கப்பலில்- நீயும் நானும்... .
சுதந்திரம்!!! நித்தம் நித்தம் குறை கூறி தற்பெருமை தலைக்கேறி தவிக்கும் கும்பலில் - நானும் ஒருவனாய்.... அரிசி முதல் ஆட்சி வரை கால் வலி முதல் கால்வாய் வரை சுற்றமே குற்றம் என... காந்தியா, நேதாஜியா? யார் சரி, யார் வலியவர் , பெரியவர்.. பட்டிமன்றங்களில் பட்டையை கிளப்பும் -நாங்கள் பீர் ஊற்றி சட்டை கழற்றி சுதந்திரமாய் கூச்சலிடும் காக்காய்கள் - இறுமாப்பு! " சுதந்திரம் பெற்றுவிட்டோமம்"... தாய் மடி(விலை நிலம்) விற்று தண்ணீருக்கும், தாணியத்துக்கும் தலை விரித்து, தாடி வளர்க்கும் தரம் உயர்ந்த முதலைகள் - நாங்கள் ஆம்!!! " சுதந்திரம் பெற்று விட்டோமாம்"... "தனி மனிதனுக்கு உணவில்லை என்றாள் ஜகத்தினை ஆழிப்போம்!!!" என்றான் பாரதி - என்னே ஒரு இறுமாப்பு!... நம் சமூகமே சாக்கடையாய், உணவின்றி அலையும் தருணம் சில பல ஆண்டுகளில் இருந்தும், சிரிப்போம் மரம் விற்று, பணம் வளர்ப்போம் நிலம் விற்று...ஏனென்றால் " நாம் சுதந்திரம் அடைந்துவிட்டோம்" இவை யாவும் தெரிந்தும், சகதியிலும், புழுதியிலும் நெளியும் சாக்கடை புழுவாய் தானிருந்தேன்.. சேற்றில் முளைத்த சில தாமர