முன் நின்று, முதல் பார்த்து
முறுவலித்து - பின் சென்று
வழிப்பார்த்து, விழியால்
நகைத் தெல்லாம் ஓர் காலம்....ஆம்!!!! அன்றெல்லாம்
" யானோக்கும் காலை நிலனோக்கும் நோக்க்காகால்
தானோக்கி மெல்ல தகும்"
என்றோம் வள்ளுவன் வழியாய்...
விரல் வலிக்க எழுதியும்,
கால் வலிக்க காத்திருந்தும்,
கனத்த இதயமும்
கையில் கடிதமுமாய்
காதல் செய்தோம்....
வலியிருந்தது அனால் வழியில்லை
இணை சேர..- எத்தனை எத்தனை தடைகள்
" சாதி என்றான், பேதமென்றான்
மதம் என்றான், குலமென்றான்பணமென்றான்"- பகட்டாய்...
இன்றும் இவை இருக்கிறது
யார் இல்லை என்றார்....
காதலை கனினியிலும், கைபேசியிலும்
கதைத்தோ, குறுந்தகவல்
கொடுத்தோ, பெற்றோ மகிழ்கிறோம்...
இதுவா காதல்..?
" கண்களவு கொள்ளும் சிறுநோக்கும் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது"...- இதுவல்லவே...!!!
பிழை கூறவில்லை நான்!
மண்ணில் சிலர் உளர்...
யாம் வேண்டுவதெல்லாம் ,
" பெற்றோர் நிராகரித்தலும்,
பிள்ளைகள் விரட்டுதலும்" வேண்டாமே?...
அன்பும், அரவணைப்பும்
பொறுமையும், விட்டுகொடுத்தலுமே காதல்...காதல் தினமும் தேவை, பின்
எதற்கோர் தனி காதலர் தினம்,
வாழ்வோம் " காதலாய் ஒவ்வோர் தினமும், கணமும்"...
.
Comments
Post a Comment